அச்சம் தவிர்
சி.விநாயகமூர்த்தி
உரிமை மாளிகையின்
உள்நுழைந்து
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
விடாத தடுப்புச் சுவரே - அச்சம்
வயசுக்கு வந்ததும்
வீரத்தை வெளிப்படுத்த
மீசை வைக்கும் ஆண்கள்
பெண்கள் வயசுக்கு வந்ததும்
தீட்டென்று தீண்டாமல் ஒதுக்கி
அவர்களுக்கு அணிவிக்கும்
ஆபரணமே அச்சம்.
விழிப்புணர்வைத் தடுக்கும்
தூக்க மாத்திரைகளே -
அச்சமும் நாணமும்
ஆண்கள் வித்த கற்புக்கடையில்
பெண்களே விரும்பி வாங்கும் வினோதம்.
நாணமும் அச்சமும்
நாய்கட்கே வேண்டுமென
சீய கவியால்... சீறிய பாரதி
திருத்திய ஆத்திச்சூடியில்
‘அச்சம் தவிர்' என்றே
எச்சக்கை விடுக்கிறார்
அச்சமின்றிப் பொங்கி எழ அங்கு
நிச்சயமுண்டு - பெண்விடுதலை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|